6 மலைகளின் அடிவாரங்கள்வரை நான் அமிழ்ந்தேன்,
கீழேயுள்ள பூமி என்னை என்றென்றைக்குமாக அடைத்து வைத்தது.
ஆனால் என் இறைவனாகிய யெகோவாவே,
நீர் குழியிலிருந்து என் உயிரை மேலே கொண்டுவந்தீர்.
7 "யெகோவாவே, என் உயிர் தளர்ந்துபோகையில்
நான் உம்மையே நினைத்தேன்,
என் மன்றாட்டு மேலெழுந்து
உமது பரிசுத்த ஆலயத்தில் உம்மிடம் வந்தடைந்தது.