14 நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக.
என் தாய் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாமல் இருப்பதாக.
15 "ஒரு மகன் பிறந்திருக்கிறான்"
என்ற செய்தியைக் கொண்டுவந்து
என் தந்தையை மகிழ்வித்த மனிதன் சபிக்கப்படுவானாக.
16 அந்த மனிதன், யெகோவா தயங்காமல்
கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப் போலிருப்பானாக.
அவன் காலையில் அழுகுரலையும்,
நண்பகலில் போர் முழக்கத்தையும் கேட்பானாக.
17 ஏனெனில் அவன் என்னைக் கருப்பையிலேயே கொல்லாமற்போனானே.
அப்பொழுது என் தாயின் கருப்பை
என் கல்லறையாய் இருந்திருக்குமே.
18 கஷ்டத்தையும், துன்பத்தையும் கண்டு
அவமானத்திலே என் வாழ்நாளை முடிக்கும்படி
கர்ப்பத்திலிருந்து நான் வெளியே வந்ததேன்?