59 அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். 60 ஆனால் குழந்தையின் தாயோ, "இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்" என்று சொன்னாள்.
61 அதற்கு அவர்கள் அவளிடம், "உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே" என்றார்கள்.
62 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். 63 அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, "இவனுடைய பெயர் யோவான்" என்று எழுதினான்.