யாக்கோபு யோவானின் வேண்டுகோள்
35 அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்கள்.
36 அதற்கு இயேசு, "நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்" என்று கேட்டார்.
37 அவர்கள் அதற்குப் பதிலாக, "உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்" என்றார்கள்.