4 அதற்கு அரசன், "அப்படியானால், உனக்கு வேண்டியது என்ன?" என்று கேட்டான்.
அப்பொழுது நான் பரலோகத்தின் இறைவனை நோக்கி மன்றாடினேன், 5 பின் நான் அரசனைப் பார்த்து, "அரசர் விரும்பினால், உமது அடியவனுக்கு உமது கண்களில் தயவு கிடைக்குமானால், எனது முற்பிதாக்கள் அடக்கம் செய்யப்பட்ட யூதாவிலுள்ள அந்த நகரத்தைத் திரும்பவும் கட்டுவதற்கு அரசர் என்னை அனுப்பவேண்டும்" என்று பதிலளித்தேன்.