Publicidade

Salmos 1

1,2 தீயவர்களின் அறிவுரையின்படி நடவாமல்,

பாவிகளின் வழியில் நில்லாமல்,

பரிகாசக்காரருடன் உட்காராமல்,

யெகோவாவினுடைய சட்டத்திலே மனமகிழ்ச்சியாயிருந்து,

இரவும் பகலும் அவருடைய வேதத்தை தியானிக்கிறவர் ஆசீர்வதிக்கபட்டவர்.

3 அப்படிப்பட்டவர் நீரோடைகளின் அருகே நாட்டப்பட்டு,

பருவகாலத்தில் தன் பழங்களைக் கொடுத்து,

இலை உதிராதிருக்கும் மரத்தைப்போல இருக்கிறார்.

அவர் செய்வதெல்லாம் செழிக்கும்.

4 தீயவர்களோ அப்படியல்ல,

அவர்கள் காற்றினால் அடித்துச் செல்லப்படும்

பதரைப்போல் இருக்கிறார்கள்.

5 ஆகையால் நியாயத்தீர்ப்பின்போது தீயவர் தப்புவதில்லை,

பாவிகளுக்கு நீதிமான்களின் கூட்டத்தில் இடமுமில்லை.

6 ஏனெனில் நீதிமான்களின் வழியை யெகோவா கண்காணிக்கிறார்;

தீயவர்களின் வழியோ அழிவுக்குக் கொண்டுசெல்லும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-