Publicidade

Salmos 110

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவா, என் ஆண்டவரிடம் சொன்னதாவது:

"நான் உமது பகைவரை

உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை

நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்."

2 யெகோவா உமது வல்லமையான செங்கோலை சீயோனிலிருந்து விரிவுபடுத்துவார்;

"நீர் உமது பகைவரின் மத்தியில் ஆளுகை செய்வீர்!"

3 உமது மக்கள் உமது யுத்தத்தின் நாளில்,

தாங்களாகவே முன்வருவார்கள்;

அதிகாலையின் கருப்பையிலிருந்து வரும் பனியைப்போல்

உமது வாலிபர்கள்

பரிசுத்த அணிவகுப்புடன் வருவார்கள்.

4 "மெல்கிசேதேக்கின் முறைமையின்படி,

நீர் என்றென்றைக்கும் ஆசாரியராகவே இருக்கிறீர்"

என்று யெகோவா ஆணையிட்டிருக்கிறார்;

அவர் தமது மனதை மாற்றமாட்டார்.

5 யெகோவா உமது வலதுபக்கத்தில் இருக்கிறார்;

அவர் தமது கோபத்தின் நாளில் அரசர்களை தண்டிப்பார்.

6 அவர் பிற நாடுகளை நியாயந்தீர்ப்பார்;

இறந்தவர்களைக் குவித்துப் பூமி முழுவதிலும் உள்ள ஆளுநர்களை தண்டிப்பார்.

7 வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் தண்ணீர் குடிப்பார்;

ஆகையால் அவர் தமது தலைநிமிர்ந்து நிற்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-