Publicidade

Salmos 54

தாவீது தங்களிடம் ஒளிந்திருக்கிறான் என்று சீப்பூரார் சவுலுக்கு சொன்னபோது, கம்பியிசைக் கருவிகளுடன் தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மஸ்கீல் என்னும் சங்கீதம்.

1 இறைவனே, உமது பெயரால் என்னைக் காப்பாற்றும்,

உமது வல்லமையால் எனக்கு நியாயம் செய்யும்.

2 இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்;

என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும்.

3 தற்பெருமையுள்ளவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்;

இறைவனை மதியாத, ஈவு இரக்கமற்ற மனிதர்

என் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.

4 நிச்சயமாக இறைவனே எனக்கு உதவுபவர்;

யெகோவாவே என்னை ஆதரிக்கிறவர்.

5 எனக்குத் தீமை செய்கிறவர்கள் மேலேயே அவர்களுடைய தீமை திரும்பட்டும்;

உமது உண்மையின் நிமித்தம் அவர்களை தண்டித்துவிடும்.

6 நான் உமக்கு சுயவிருப்பக் காணிக்கையைப் பலியிடுவேன்;

யெகோவாவே, நான் உமது பெயரைத் துதிப்பேன், ஏனெனில் அது நல்லது.

7 நீர் என்னை என்னுடைய எல்லாக் கஷ்டங்களிலிருந்தும் விடுவித்தீர்;

என் கண்கள் என் எதிரிகளின் வீழ்ச்சியைப் பார்த்தன.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-