Publicidade

Salmos 121

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 மலைகளுக்கு நேராக என் கண்களை உயர்த்துகிறேன்.

எங்கிருந்து எனக்கு உதவி வரும்?

2 வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவிடமிருந்தே,

எனக்கு உதவி வரும்.

3 அவர் உன் காலைச் சறுக்கவிடமாட்டார்;

உன்னைக் காக்கும் அவர் உறங்கமாட்டார்.

4 இதோ, இஸ்ரயேலைக் காக்கிறவர்,

உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5 யெகோவா உன்னைக் காக்கிறவர்;

யெகோவா உன் வலப்பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.

6 பகலில் சூரியனோ,

இரவில் சந்திரனோ உனக்குத் தீங்கு செய்யாது.

7 யெகோவா உன்னை எல்லாத் தீங்கிலிருந்தும் காப்பார்;

அவர் உன் வாழ்வைக் காப்பார்.

8 யெகோவா உன் போக்கையும் வரத்தையும்

இப்பொழுதும் எப்பொழுதும் காப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-