Publicidade

Salmos 87

கோராகின் மகன்களின் பாட்டாகிய சங்கீதம்.

1 யெகோவா தமது அஸ்திபாரத்தைப் பரிசுத்த மலையில் அமைத்திருக்கிறார்.

2 யெகோவா யாக்கோபிலுள்ள எல்லா வாழ்விடங்களைப் பார்க்கிலும்,

சீயோனின் வாசல்களை நேசிக்கிறார்.

3 இறைவனின் நகரமே,

உன்னைக்குறித்து மகிமையான காரியங்கள் சொல்லப்படுகின்றன:

4 "என்னை ஏற்றுக்கொள்ளுகிறவர்களோடு

நான் ராகாபையும் பாபிலோனையும் குறித்து,

‘இவர்கள் சீயோனிலே பிறந்தவர்கள்’ என்று சொல்வேன்;

பெலிஸ்தியாவையும் தீருவையும் எத்தியோப்பியாவையும் குறித்தும் அப்படியே சொல்வேன்."

5 உண்மையாகவே சீயோனைக் குறித்து,

"இன்னார் இன்னார் அங்கே பிறந்தார்கள் என்றும்,

மகா உன்னதமானவர் தாமே அதை நிலைநிறுத்துவார்" என்றும் சொல்லப்படும்.

6 "இன்னார் சீயோனிலே பிறந்தார்"

என்பதாக யெகோவா மக்களின் பதிவேட்டில் எழுதுவார்.

7 அவர்கள் இசை மீட்டும்பொழுது,

"எங்கள் ஊற்றுகள் எல்லாம் உம்மிலேயே இருக்கிறது" என்று பாடுவார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-