Publicidade

Salmos 112

1 அல்லேலூயா.

யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவனும்,

அவருடைய கட்டளைகளில் மகிழ்ச்சியடைகிறவனும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

2 அவனுடைய பிள்ளைகள் நாட்டில் பலமுள்ளவர்களாய் இருப்பார்கள்;

நீதிமான்களின் தலைமுறைகள் எல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.

3 செல்வமும் சொத்துக்களும் அவன் வீட்டிலிருக்கும்;

அவனுடைய நீதி என்றும் நிலைக்கிறது.

4 நீதிமான்களுக்கு இருளிலும் வெளிச்சம் உதிக்கும்;

ஏனெனில் அவர்கள் இரக்கமும், கருணையும், நீதியுமுள்ளவர்கள்.

5 தாராள மனதுடன் கடன்கொடுத்து,

தன் காரியங்களை நீதியுடன் நடப்பிக்கிறவனுக்கு நன்மை உண்டாகும்.

6 நிச்சயமாய் அவன் ஒருபோதும் அசைக்கப்படமாட்டான்;

நீதிமானை மக்கள் நீடித்த காலத்திற்கு நினைவிற்கொள்வார்கள்.

7 துர்ச்செய்தியின் பயம் அவனுக்கு இருக்காது;

அவனுடைய இருதயம் யெகோவாவை நம்பி உறுதியாய் இருக்கிறது.

8 அவனுடைய இருதயம் பாதுகாப்பாய் இருக்கிறது, அவனுக்குப் பயமே இருக்காது;

கடைசியில் வெற்றிப் பெருமிதத்தோடு தன் எதிரிகளைப் பார்ப்பான்.

9 அவன் ஏழைகளுக்கு அன்பளிப்புகளை அள்ளிக்கொடுப்பான்;

அவனுடைய நீதி என்றென்றும் நிலைத்திருக்கிறது;

அவன் மதிப்பிற்குரியவனாய் தலைநிமிர்ந்து நடப்பான்.

10 கொடுமையானவன் அதைக்கண்டு ஏமாற்றமடைவான்;

அவன் தன் பற்களை கடித்துக்கொண்டு அழிந்துபோவான்;

கொடுமையுள்ளவர்களின் ஆசைகள் நிறைவேறாமற் போகும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-