Publicidade

Salmos 100

நன்றியுணர்வை வெளிப்படுத்தும் சங்கீதம்.

1 பூமியிலுள்ளவர்களே, எல்லோரும் மகிழ்ச்சியுடன் யெகோவாவை ஆர்ப்பரியுங்கள்.

2 மகிழ்ச்சியுடன் யெகோவாவை வழிபடுங்கள்,

மகிழ்ச்சிப் பாடல்களோடு அவர்முன் வாருங்கள்.

3 யெகோவாவே இறைவன் என்று அறியுங்கள்.

அவரே நம்மை உண்டாக்கினார், நாம் அவருடையவர்கள்;

நாம் அவருடைய மக்கள், அவருடைய மேய்ச்சலின் ஆடுகள்.

4 அவருடைய வாசல்களில் நன்றியோடும்,

அவருடைய ஆலய முற்றங்களில் துதியோடும், உட்செல்லுங்கள்

அவருக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரைத் துதியுங்கள்.

5 யெகோவா நல்லவர், அவருடைய அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது;

அவருடைய உண்மை எல்லாத் தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வருகிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-