Publicidade

Salmos 126

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 நாடு கடத்தப்பட்டவர்களை யெகோவா திரும்பவும் சீயோனுக்குக் கொண்டுவந்தபோது,

நாங்கள் கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2 எங்கள் வாய்கள் சிரிப்பினாலும்,

எங்கள் நாவுகள் மகிழ்ச்சிப் பாடல்களினாலும் நிறைந்திருந்தன.

அப்பொழுது, "யெகோவா அவர்களுக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்"

என்று நாடுகளுக்கிடையே சொல்லப்பட்டது.

3 யெகோவா நமக்காகப் பெரிய காரியங்களைச் செய்தார்;

அதினால் நாம் மகிழ்ச்சியினால் நிறைந்திருக்கிறோம்.

4 யெகோவாவே, நீரோடைகள் நெகேவ் பாலைவனத்தை புதுப்பிப்பதுபோல,

எங்கள் நல்வாழ்வை எங்களுக்குத் திருப்பித்தாரும்.

5 கண்ணீருடன் விதைக்கிறவர்கள்,

மகிழ்ச்சியின் பாடல்களுடன் அறுவடை செய்வார்கள்.

6 விதைப்பதற்கான விதைகளை

அழுதுகொண்டு சுமந்து போகிறவன்,

மகிழ்ச்சியின் பாடல்களுடன்

கதிர்க்கட்டுகளைச் சுமந்துகொண்டு திரும்பிவருவான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-