Publicidade

Salmos 131

சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.

1 யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,

என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;

பெரிய காரியங்களிலும்,

எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.

2 பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,

என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;

என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

3 இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்

யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-