Publicidade

Salmos 123

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 பரலோகத்தின் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறவரே,

நான் உம்மை நோக்கி என் கண்களை உயர்த்தி மன்றாடுகிறேன்.

2 அடிமைகளின் கண்கள் தங்கள் எஜமானுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும்,

அடிமைப்பெண்ணின் கண்கள் தன் எஜமாட்டியினுடைய கரத்தை நோக்கிப் பார்ப்பதுபோலவும்,

எங்கள் கண்களும் எங்கள் இறைவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கம் காண்பிக்கும்வரை,

அவரையே நோக்கிப்பார்க்கின்றன.

3 எங்கள்மேல் இரக்கமாயிரும், யெகோவாவே, எங்கள்மேல் இரக்கமாயிரும்;

அதிகமான அவமதிப்பை நாங்கள் சகித்துக்கொண்டோம்.

4 பெருமைக்காரரின் ஏளனத்தையும்,

அகங்காரம் கொண்டவர்களின் அதிகமான அவமதிப்பையும்

நாங்கள் சகித்துக்கொண்டோம்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-