Publicidade

Salmos 43

1 இறைவனே, என் நீதியை மெய்ப்பித்துக் காட்டும்;

இறை பக்தியற்ற நாட்டினருக்கு விரோதமாய்

எனக்காக வழக்காடும்,

வஞ்சகமும் கொடுமையுமான மனிதரிடமிருந்து

என்னைத் தப்புவியும்.

2 ஏனெனில் நீரே என் இறைவன், என் கோட்டை.

நீர் ஏன் என்னைப் புறக்கணித்துவிட்டீர்?

பகைவனால் ஒடுக்கப்பட்டு,

நான் ஏன் துக்கத்துடன் திரியவேண்டும்?

3 உமது ஒளியையும் உமது உண்மையையும் அனுப்பும்;

அவை எனக்கு வழிகாட்டட்டும்.

நீர் குடியிருக்கும் இடமான

உமது பரிசுத்த மலைக்கு அவை என்னைக் கொண்டுவரட்டும்.

4 அப்பொழுது இறைவனின் பலிபீடத்தண்டைக்குப் போவேன்;

என் மகிழ்ச்சியும் என் களிப்புமான இறைவனிடத்திற்குப் போவேன்.

இறைவனே, என் இறைவனே,

யாழ் இசைத்து உம்மைத் துதிப்பேன்.

5 என் ஆத்துமாவே, நீ ஏன் சோர்ந்து போகிறாய்?

ஏன் இவ்விதமாய் எனக்குள் கலங்கியிருக்கிறாய்?

இறைவனில் உன் எதிர்பார்ப்பை வைத்திரு;

நான் என் இறைவனின் இரட்சிப்பிற்காக

இன்னும் அவரைத் துதிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-