Publicidade

Salmos 137

1 பாபிலோனின் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து,

சீயோனை நினைத்தபோது அழுதோம்.

2 அங்கே இருந்த ஆற்றலறிச் செடிகளின்மேல்

எங்கள் கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.

3 ஏனெனில் எங்களைச் சிறைப்பிடித்தவர்கள்,

அங்கே எங்களைப் பாடும்படி கேட்டார்கள்;

எங்களைச் சித்திரவதை செய்தவர்கள் மகிழ்ச்சிப் பாடல்களைப் பாடும்படி வற்புறுத்தி,

"சீயோனின் பாடல்களுள் ஒன்றை எங்களுக்காகப் பாடுங்கள்" என்று சொன்னார்கள்.

4 வேறுநாட்டு மண்ணில் இருக்கையில்

யெகோவாவின் பாடல்களை எங்களால் எப்படிப் பாடமுடியும்?

5 எருசலேமே! நான் உன்னை மறந்தால்,

என் வலதுகை அதின் திறமையை மறப்பதாக.

6 நான் உன்னை நினையாவிட்டால்,

எருசலேமை எனது மேலான மகிழ்ச்சியாகக்

நான் கருதாவிட்டால்,

என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

7 யெகோவாவே! எருசலேம் கைப்பற்றபட்ட நாளிலே

ஏதோமியர் செய்தவற்றை நினைவுகூரும்;

"அதை இடித்துப்போடுங்கள்,

அதின் அஸ்திபாரங்கள்வரை அதை இடித்துப்போடுங்கள்!" என்று சொன்னார்களே.

8 பாபிலோன் மகளே, அழிவுக்கு ஒப்படைக்கப்பட்டவளே,

நீ எங்களுக்குச் செய்தவற்றுக்காக

உனக்குப் பதில் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

9 உன் குழந்தைகளைப் பிடித்து,

அவர்களைப் பாறைகளின்மேல் மோதியடிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-