Publicidade

Salmos 138

தாவீதின் சங்கீதம்.

1 யெகோவாவே, நான் என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்;

"தெய்வங்கள்" முன்னிலையில் நான் உமக்குத் துதி பாடுவேன்.

2 நான் உமது பரிசுத்த ஆலயத்தை நோக்கிப் பணிந்து,

உமது உடன்படிக்கையின் அன்புக்காகவும் உம்முடைய சத்தியத்திற்காகவும்,

உமது பெயரைத் துதிப்பேன்;

ஏனெனில் எல்லாக் காரியங்களுக்கும் மேலாக

உமது பெயரையும், உமது வார்த்தையையும் உயர்த்தியிருக்கிறீர்.

3 நான் கூப்பிட்டபோது நீர் எனக்குப் பதில் கொடுத்தீர்;

நீர் என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னை மிகவும் தைரியப்படுத்தினீர்.

4 யெகோவாவே, பூமியின் அரசர்கள் எல்லோரும்

உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிக்கட்டும்.

5 யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால்,

அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.

6 யெகோவா உயர்ந்தவராக இருந்தும்,

தாழ்மையுள்ளவர்களை அக்கறையுடன் நோக்கிப் பார்க்கிறார்;

ஆனால் பெருமையுள்ளவர்களையோ அவர் தூரத்திலிருந்தே அறிகிறார்.

7 துன்பத்தின் மத்தியிலே நான் நடக்கின்றபோதிலும்,

நீர் என் உயிரைப் பாதுகாக்கிறீர்.

என் பகைவரின் கோபத்திற்கு எதிராக நீர் உமது கையை நீட்டுகிறீர்;

உமது வலதுகரத்தினால் என்னைக் காப்பாற்றுகிறீர்.

8 யெகோவா என்னைக் குறித்த தமது நோக்கத்தை நிறைவேற்றுவார்;

யெகோவாவே, உமது உடன்படிக்கையின் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது;

உமது கரத்தின் செயல்களைக் கைவிடாதேயும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-