Publicidade

Salmos 125

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 யெகோவாவை நம்புகிறவர்கள் சீயோன் மலையைப்போல்

என்றென்றும் அசையாமல் நிலைத்திருப்பார்கள்.

2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருப்பதைப்போல்,

யெகோவா இப்பொழுதும் எப்பொழுதும்

தமது மக்களைச் சுற்றியிருக்கிறார்.

3 நீதிமான்களுக்கென ஒதுக்கப்பட்ட நாட்டின்மேல்,

கொடியவர்களின் ஆட்சி நீடிக்காது;

இல்லையெனில், நீதியற்றவர்களும் தீமைசெய்யத்

தங்கள் கைகளை நீட்டலாம்.

4 யெகோவாவே, நல்லவர்களுக்கு,

இருதயத்தில் நேர்மையாய் இருப்போருக்கு நன்மை செய்யும்.

5 குறுக்கு வழிகளுக்குத் திரும்புகிறவர்களையோ,

யெகோவா தீயவரோடேகூட தண்டிப்பார்.

இஸ்ரயேலின்மீது சமாதானம் உண்டாவதாக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-