Publicidade

Salmos 11

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

1 நான் யெகோவாவிடத்தில் தஞ்சமடைகிறேன்.

அப்படியிருக்க நீங்கள் என்னிடம் எப்படி இவ்வாறு சொல்லமுடியும்:

"ஒரு பறவையைப்போல உன்னுடைய மலைக்குத் தப்பிப்போ.

2 பாருங்கள், கொடியவர்கள் தங்கள் வில்லுகளை வளைக்கிறார்கள்;

நேர்மையான இருதயம் உள்ளவர்மேல்

இருளிலிருந்து எய்வதற்காக

தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்.

3 அஸ்திபாரங்கள் அழிக்கப்படும்போது,

நீதிமான்கள் என்ன செய்யமுடியும்?"

4 யெகோவா தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்;

யெகோவா தமது பரலோக சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்.

அவர் மனுமக்களை உற்று நோக்குகிறார்;

அவருடைய கண்கள் அவர்களை ஆராய்ந்து பார்க்கின்றன.

5 யெகோவா நீதிமான்களை ஆராய்ந்தறிகிறார்;

வன்முறைகளை விரும்புகிற கொடியவர்களையோ,

அவர் மனதார வெறுக்கிறார்.

6 அவர் கொடியவர்களின்மேல் நெருப்புத் தணல்களையும்,

எரியும் கந்தகத்தையும் பெய்யப்பண்ணுவார்;

வறட்சியான காற்றே அவர்களின் பங்காயிருக்கும்.

7 யெகோவா நீதியுள்ளவர்,

அவர் நீதியை நேசிக்கிறார்;

நேர்மையான மனிதர் அவர் முகத்தைக் காண்பார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-