Publicidade

Salmos 114

1 இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது,

யாக்கோபின் குடும்பத்தார் வேறுநாட்டைச் சேர்ந்த மக்களிடமிருந்து வெளியே வந்தபோது,

2 யூதா, இறைவனின் பரிசுத்த இடமாயிற்று;

இஸ்ரயேல் அவருடைய அரசாட்சி ஆயிற்று.

3 கடல் அவர்களைக் கண்டு ஓடி ஒதுங்கியது;

யோர்தான் நதி அதின் வழியை மாற்றியது.

4 மலைகள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,

குன்றுகள் ஆட்டுக்குட்டிகள்போலவும் துள்ளின.

5 கடலே, நீ விலகி ஒதுங்கியது ஏன்?

யோர்தான் நதியே, நீ ஓடாமல் நின்றது ஏன்?

6 மலைகளே, நீங்கள் செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும்,

குன்றுகளே, நீங்கள் செம்மறியாட்டுக் குட்டிகளைப் போலவும் துள்ளியது ஏன்?

7 பூமியே, யெகோவாவின் சமுகத்தில் நடுங்கு,

யாக்கோபின் இறைவனின் சமுகத்தில் நடுங்கு.

8 அவர் கற்பாறையைக் குளமாகவும்,

கடினமான கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றினாரே.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-