Publicidade

Salmos 129

சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.

1 "என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்" என்று

இஸ்ரயேலர் சொல்லட்டும்;

2 "என் வாலிப காலத்திலிருந்து அவர்கள் என்னை மிகவும் ஒடுக்கினார்கள்,

ஆனாலும் அவர்களால் என்மேல் வெற்றிகொள்ள முடியவில்லை.

3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது,

தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள்.

4 ஆனாலும் யெகோவா நீதியுள்ளவர்;

அவர் கொடியவர்களின் கட்டுகளை அறுத்து, என்னை விடுதலையாக்கினார்."

5 சீயோனை வெறுக்கிற அனைவரும்

வெட்கப்பட்டுத் திரும்பிப் போகட்டும்.

6 அவர்கள் வீட்டுக்கூரையில் முளைக்கும் புல்லைப்போல் ஆகட்டும்;

அது வளரும் முன்பு வாடிப்போகுமே.

7 அறுவடை செய்கிறவன் அவற்றால் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது;

அவற்றைச் சேர்க்கிறவனும் தன் கைகளை நிரப்பிக்கொள்ள முடியாது.

8 வழிப்போக்கர்கள் அவர்களிடம்,

"யெகோவாவின் ஆசீர்வாதம் உங்கள்மேல் இருக்கட்டும்;

யெகோவாவின் பெயரினால் நாங்கள் உங்களை ஆசீர்வதிக்கிறோம்"

என்றும் சொல்லாதிருக்கட்டும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-