பழமொழி 16
19 என் மகனே, சொல்வதைக் கவனமாய்க் கேட்டு ஞானமுள்ளவனாயிரு,
உன் இருதயத்தைச் சரியான பாதையில் பதித்துக்கொள்:
20 திராட்சை மதுவைக் குடிப்பவர்களோடும்,
மாம்சப் பெருந்தீனிக்காரரோடும் நீ சேராதே.
21 ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்;
போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும்.
பழமொழி 17
22 உனக்கு வாழ்வு கொடுத்த உன் தந்தைக்குச் செவிகொடு;
உன் தாய் வயது சென்றவளாயிருக்கும்போது அவளை இழிவாகக் கருதாதே.