13 அவள் கம்பளியையும் சணலையும் தெரிந்தெடுத்து,
மிக ஆர்வத்துடன் தன் கைகளினால் வேலை செய்கிறாள்.
14 அவள் தூர இடத்திலிருந்து உணவுப் பொருட்களை
ஏற்றிவரும் வியாபாரக் கப்பலைப்போல் இருக்கிறாள்.
15 அவள் விடியுமுன்னே இருட்டோடே எழும்புகிறாள்;
அவள் தன் குடும்பத்திற்கு உணவை ஆயத்தப்படுத்தி,
தன் வேலைக்காரிகளுக்கு பகிர்ந்து கொடுக்கிறாள்.
16 அவள் ஒரு வயலைப்பற்றிக் கருத்தாய் விசாரித்து, அதை வாங்குகிறாள்;
அவள் தன் வருமானத்தினால் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்குகிறாள்.
17 மிகவும் சுறுசுறுப்புடன் தன் வேலைகளைச் செய்கிறாள்;
அதைச் செய்ய தனது கைகளை பலப்படுத்துகிறாள்.
18 தன் தொழில் இலாபகரமாய் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறாள்;
அவளுடைய விளக்கு இரவிலும் அணைவதில்லை31:18 இரவுவரைக் கடினமாக உழைக்கிறாள் என்று அர்த்தம்..
19 அவள் தன் கைகளில் இராட்டினத்தைப் பிடித்துக்கொண்டு,
தன் விரல்களினால் நூற்பந்தைப் பற்றிக்கொள்கிறாள்.
20 அவள் ஏழைகளுக்குத் தன் கைகளைத் திறந்து,
தேவையுள்ளோர்களுக்குத் தன் உதவிக் கரத்தை நீட்டுகிறாள்.