15 நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி,
நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
16 உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ?
உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
17 அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும்,
அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக,
நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
19 அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக,
அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்;
அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
20 என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்?
இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?