3 எப்பிராயீமைக் கைபிடித்து
நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே;
ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே
என்பதை அவர்கள் உணரவில்லை.
4 நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும்
மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன்.
ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன்,
அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன்,
அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.