Publicidade

Oséias 14

மனந்திரும்புதலின் ஆசீர்வாதம்

1 இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு;

உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன.

2 நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன்

யெகோவாவிடம் திரும்புங்கள்;

நீங்கள் அவரிடம்,

"எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும்,

எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்;

அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை

காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள்.

3 அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது;

நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம்.

எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை

‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்;

ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்."

4 "நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன்,

நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன்,

எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.

5 நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்;

அவன் லில்லியைப்போல் பூப்பான்.

லெபனோனின் கேதுருபோல்

வேரூன்றி நிற்பான்.

6 அவனுடைய இளந்தளிர்கள் வளரும்.

அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும்,

அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும்.

7 திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்;

அவன் தானியத்தைப்போல் செழிப்பான்.

திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்;

அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும்.

8 எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை;

இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன்.

நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன்.

அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன."

9 ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான்.

பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான்.

யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்;

நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள்,

ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள்.

Veja também

Publicidade
Oséias
Ver todos os capítulos de Oséias
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-