Publicidade

Jó 26

யோபுவின் வார்த்தைகள்

1 யோபு மறுமொழியாக:

2 "பெலனில்லாதவனுக்கு நீ எப்படி உதவிசெய்தாய்?

பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்?

3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உறுதுணையாயிருந்து,

மெய்ப்பொருளைக் குறித்து அறிவித்தாய்?

4 யாருக்கு அறிவைப் போதித்தாய்?

உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது?

5 தண்ணீரின் கீழ் இறந்தவர்களுக்கும்,

அவர்களுடன் தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு.

6 அவருக்கு முன்பாகப் பாதாளம் தெரியும்விதத்தில் திறந்திருக்கிறது;

நரகம் மூடப்படாதிருக்கிறது.

7 அவர் வடக்குமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து,

பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.

8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்;

அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.

9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாயத்தை பலப்படுத்தி,

அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.

10 அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்;

வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.

11 அவருடைய கண்டிப்பினால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.

12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரச்செய்து,

தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.

13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்;

அவருடைய கை நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உண்டாக்கியது.

14 இதோ, இவைகள் அவருடைய படைப்பில் கடைசியானவைகள்,

அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்;

அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்" என்றான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-19_11-20-24-