எகிப்தை நம்பியிருப்போருக்கு ஐயோ!
1 உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு!
அவர்கள் குதிரைகளை நம்பி,
தங்கள் திரளான தேர்களிலும்,
தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும்,
யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள்.
2 யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்;
அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை,
அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும்,
தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார்.