இஸ்ரயேலின் ஒரே மீட்பர்
1 இப்போது யெகோவா சொல்வது இதுவே:
யாக்கோபே, உன்னைப் படைத்தவரும்,
இஸ்ரயேலே, உன்னை உருவாக்கியவரும் சொல்வதாவது,
"பயப்படாதே, நான் உன்னை மீட்டிருக்கிறேன்;
நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்திருக்கிறேன்; நீ என்னுடையவன்.
2 நீ தண்ணீரைக் கடக்கும்போது,
நான் உன்னுடன் இருப்பேன்;
நீ ஆறுகளைக் கடக்கும்போது,
அவை உன்னை அள்ளிக்கொண்டு போகாது;
நீ நெருப்பில் நடக்கும்போதும்
எரிந்து போகமாட்டாய்.
நெருப்பு சுவாலை உன்னை எரித்துப்போடாது.
3 ஏனெனில், நானே உங்கள் இறைவனாகிய யெகோவா,
இஸ்ரயேலின் பரிசுத்தராகிய நானே உன் இரட்சகர்;
நான் உன்னை மீட்கும் பொருளாக எகிப்தையும்,
உனக்குப் பதிலாக எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுக்கிறேன்.