6 உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள்,
கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்;
வானங்கள் புகையைப்போல் மறையும்,
பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்;
அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள்.
ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும்,
எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.