5 ஆனால், அவரோ எங்கள் மீறுதல்களினிமித்தம் ஊடுருவக் குத்தப்பட்டார்,
எங்கள் அக்கிரமங்களுக்காகவே அவர் நொறுக்கப்பட்டார்;
நமக்கு சமாதானத்தைக் கொண்டுவந்த தண்டனை அவர்மேல் வந்தது,
அவருடைய காயங்களினால் நாம் குணமாகிறோம்.
6 நாமெல்லோரும் ஆடுகளைப்போல, வழிதவறி அலைந்தோம்;
நம்முடைய சொந்த வழிக்கே திரும்பினோம்.
யெகோவாவோ நம் எல்லோருடைய அநியாயத்தையும்
அவர்மேல் சுமத்தினார்.
7 அவர் ஒடுக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டார்,
அப்படியிருந்தும் அவர் தனது வாயைத் திறக்கவில்லை;
அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டியைப் போலவும்,
மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டைப்போலவும்
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.