13 "ஓய்வுநாளின் சட்டங்களை மீறுவதிலிருந்து உன் கால்களை விலக்கு;
என் பரிசுத்த நாளில் நீ உனக்கு விரும்பிய விதமாய் நடவாதே.
ஓய்வுநாளான யெகோவாவினுடைய பரிசுத்த நாளை,
மகிழ்ச்சியின் நாளென்றும் மேன்மையின் நாளென்றும் அழை.
உன் சொந்த வழியில் போகாமலும், நீ விரும்பியவாறு செய்யாமலும்,
வீண் வார்த்தைகளைப் பேசாமலும் அந்நாளை மேன்மைப்படுத்து.
14 அப்பொழுது நீ யெகோவாவிடம் மகிழ்ச்சிகொள்வாய்,
நாட்டின் உயர்ந்த இடங்களில் நான் உன்னை ஏறியிருக்கும்படி செய்வேன்.
உன் தகப்பன் யாக்கோபின் சுதந்திரத்தில் நீ களிப்படையும்படி செய்வேன்."
யெகோவாவின் வாயே இதைச் சொல்லிற்று.