3 ‘நாங்கள் உபவாசித்தோம், என்று அவர்கள் கேட்கிறார்கள்.
நீர் அதைக் காணவில்லையா?
நாங்கள் ஏன் எங்களைத் தாழ்த்தினோம்;
நீர் அதைக் கவனிக்கவில்லையா?’
"நீங்கள் உபவாசிக்கும் நாளில் நீங்கள் விரும்பியதையே செய்து,
உங்கள் வேலைக்காரரையும் கடுமையாய் நடத்துகிறீர்கள்.
4 உங்கள் உபவாசம் வாக்குவாதத்திலும், சண்டையிலும்,
கொடுமையான கைகளினால் ஒருவரையொருவர் அடித்துக்கொள்வதிலுமே முடிகிறது.
நீங்கள் இன்று உபவாசம் செய்வதுபோல் உபவாசித்தால்,
உங்கள் குரல் பரலோகத்திற்கு எட்டுமென எதிர்பார்க்க முடியாதே.
5 இப்படியான உபவாசத்தையா நான் தெரிந்துகொண்டேன்?
அது ஒருவன் தன்னைத் தாழ்த்திக்கொள்ளுவதற்கான நாள் மட்டுமோ?
உபவாசம் என்பது துக்கவுடையில்,
சாம்பலில் கிடந்து நாணல் புல்லைப்போல் தலைகுனிவது மட்டுமா?
இதையா யெகோவா ஏற்றுக்கொள்ளும் உபவாசம் என்றும்
அவருக்கு ஏற்ற நாள் என்றும் சொல்கிறீர்கள்.
6 "நான் தெரிந்துகொண்ட உபவாசம் என்பது:
அநீதியின் சங்கிலிகளைத் தளர்த்துவதும்,
நுகத்தின் கயிறுகளை அவிழ்ப்பதும்,
ஒடுக்கப்பட்டோரை விடுதலையாக்குவதும்,
ஒவ்வொரு நுகத்தையும் உடைத்துப் போடுவதும் அல்லவோ?