Publicidade

Salmos 1

1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும்,

பாவிகளுடைய வழியில் நிற்காமலும்,

பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,

2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து,

இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான்.

3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு,

தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து,

இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான்.

அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல்,

காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.

5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும்,

பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.

6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்;

துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_06-50-08-