Publicidade

Salmos 52

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், "தாவீது அகிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்" என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறியபோது பாடப்பட்ட பாடல்.

1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்?

தேவனுடைய கிருபை எந்நாளும் உள்ளது.

2 நீ கேடுகளைச் செய்ய திட்டமிடுகிறாய்,

கபடுசெய்யும் உன்னுடைய நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது.

3 நன்மையைவிட தீமையையும்,

யாதார்த்தம் பேசுகிறதைவிட பொய்யையும் விரும்புகிறாய். (சேலா)

4 கபடமுள்ள நாவே, அழிக்கும் எல்லா வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்;

5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இல்லாதபடி அழித்துப்போடுவார்;

அவர் உன்னைப் பிடித்து, உன் குடியிருப்பிலிருந்து பிடுங்கி,

நீ உயிருள்ளோர் தேசத்தில் இல்லாதபடி உன்னை அழித்துப்போடுவார். (சேலா)

6 நீதிமான்கள் அதைக்கண்டு பயந்து, அவனைப் பார்த்து சிரித்து:

7 இதோ, தேவனைத் தன்னுடைய பெலனாக கருதாமல்,

தன்னுடைய செல்வப்பெருக்கத்தை நம்பி,

தன்னுடைய தீமையில் பலத்துக்கொண்ட மனிதன் இவன்தான் என்பார்கள்.

8 நானோ தேவனுடைய ஆலயத்தில்

பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன்,

தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து,

உமது பெயருக்குக் காத்திருப்பேன்;

உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-