Publicidade

Salmos 64

இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்.

1 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தில் என்னுடைய சத்தத்தைக் கேட்டருளும்;

எதிரியால் வரும் பயத்தை நீக்கி, என்னுடைய உயிரை காத்தருளும்.

2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும்,

அக்கிரமக்காரர்களுடைய கலகத்திற்கும் என்னை விலக்கி மறைத்தருளும்.

3 அவர்கள் தங்களுடைய நாவை வாளைப்போல் கூர்மையாக்கி,

4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்வதற்காக கசப்பான வார்த்தைகளாகிய தங்களுடைய அம்புகளை நாணேற்றுகிறார்கள்;

சற்றும் பயமின்றி திடீரென்று அவன்மேல் எய்கிறார்கள்.

5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு,

மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைசெய்து,

அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள்.

6 அவர்களுடைய நியாயக்கேடுகளை ஆராய்ந்துதேடி,

தந்திரமான யோசனை நிறைவேறும்படி முயற்சி செய்கிறார்கள்;

அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாக இருக்கிறது.

7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார்,

திடீரென்று அவர்கள் காயப்படுவார்கள்.

8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழே விழும்படி

அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்;

அவர்களைக் காண்கிற அனைவரும் ஓடிப்போவார்கள்.

9 எல்லா மனிதரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து,

அவர் செய்கையை உணர்ந்துகொள்வார்கள்.

10 நீதிமான் யெகோவாவுக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்;

செம்மையான இருதயமுள்ளவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-