Publicidade

Salmos 101

தாவீதின் பாடல்.

1 இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்;

யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.

2 உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;

எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!

என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.

3 தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்;

வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்;

அது என்னைப் பற்றாது.

4 மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;

பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.

5 பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்;

பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.

6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்;

உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.

7 கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை;

பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.

8 அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக,

தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-