Publicidade

Salmos 65

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்.

1 தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது;

பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.

2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மனிதர்கள் அனைவரும் உம்மிடத்தில் வருவார்கள்.

3 அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது;

தேவனே நீரோ எங்களுடைய மீறுதல்களை மன்னிக்கிறீர்.

4 உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்;

உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

5 பூமியின் கடைசி எல்லைகளிலும்

தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற

எங்களுடைய இரட்சிப்பின் தேவனே,

நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.

6 வல்லமையைக் கட்டிக்கொண்டு,

உம்முடைய பலத்தினால் மலைகளை உறுதிப்படுத்தி,

7 கடல்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும்,

மக்களின் குழப்பத்தையும் அமர்த்துகிறீர்.

8 பூமியின் கடைசி இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களுக்காக பயப்படுகிறார்கள்;

காலையையும், மாலையையும் சந்தோஷப்படச்செய்கிறீர்.

9 தேவனே நீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்;

தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்;

இப்படி நீர் அதைத் திருத்தி,

அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர்.

10 அதின் வரப்புகள் தணியும்படி அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து,

அதை மழைகளால் கரையச்செய்து, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்.

11 வருடத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்;

உமது பாதைகள் நெய்யாகப் பொழிகிறது.

12 வனாந்திர பசும்புல்களிலும் பொழிகிறது;

மேடுகள் சுற்றிலும் பூரிப்பாக இருக்கிறது.

13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது;

பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது;

அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-