Publicidade

Salmos 124

தாவீதின் ஆரோகண பாடல்.

1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது,

யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது,

நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.

4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து,

வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும்

என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல்

இருக்கிற யெகோவாவுக்கு நன்றி.

7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல

நம்முடைய ஆத்துமா தப்பினது,

கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.

8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின

யெகோவாவுடைய பெயரில் உள்ளது.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-