Publicidade

Salmos 30

ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.

1 யெகோவாவே,

என்னுடைய எதிரிகள்

என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,

நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,

நான் உம்மைப் போற்றுவேன்.

2 என் தேவனாகிய யெகோவாவே,

உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,

என்னை நீர் குணமாக்கினீர்.

3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,

நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.

4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,

அவரைப் புகழ்ந்துபாடி,

அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.

5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,

அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;

மாலையில் அழுகை வரும்,

அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.

6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,

நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.

7 யெகோவாவே, உம்முடைய தயவினால்

நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;

உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;

8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு?

புழுதி உம்மைத் துதிக்குமோ?

அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?

9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து

என்மேல் இரக்கமாக இரும்;

யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;

10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;

யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.

11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்;

என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்

உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக

நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,

மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.

12 என் தேவனாகிய யெகோவாவே,

உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-