Publicidade

Salmos 114

1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,

2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும்,

இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.

3 கடல் கண்டு விலகி ஓடினது;

யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.

4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்,

குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.

5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்;

யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;

6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே,

நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும்,

உங்களுக்கு என்ன வந்தது?

7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும்,

யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.

8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும்,

கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-