Publicidade

Salmos 47

கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.

1 எல்லா மக்களே, கைகொட்டி,

தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.

2 உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும்,

பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.

3 மக்களை நமக்கு கீழ்படுத்தி,

தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)

5 தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்;

நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8 தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்;

தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.

9 மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்;

பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்;

அவர் மகா உன்னதமான தேவன்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-