Publicidade

Salmos 131

தாவீதின் ஆரோகண பாடல்.

1 யெகோவாவே, என்னுடைய இருதயம் பெருமைகொள்வதில்லை,

என்னுடைய கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல;

பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என்னுடைய ஆத்துமாவை அடக்கி அமரச்செய்தேன்;

என்னுடைய ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.

3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-