Publicidade

Salmos 110

தாவீதின் பாடல்.

1 யெகோவா என் ஆண்டவரை நோக்கி:

நான் உம்முடைய எதிரிகளை உம்முடைய பாதத்தின்கீழ் போடும்வரைக்கும்,

நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்றார்.

2 யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்;

நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.

3 உமது மகத்துவத்தின் நாளிலே

உம்முடைய மக்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரம் உள்ளவர்களாக இருப்பார்கள்;

அதிகாலையின் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமமாக உம்முடைய மக்கள் உமக்குப் பிறப்பார்கள்.

4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி

என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறீர் என்று யெகோவா ஆணையிட்டார்;

மனம் மாறாமலுமிருப்பார்.

5 உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர்,

தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.

6 அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்;

எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்;

அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

7 வழியிலே அவர் நதியில் குடிப்பார்;

ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-