Publicidade

Salmos 125

1 யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும்

சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.

2 மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல்,

யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும்

தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.

3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு,

துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.

4 யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.

5 தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக்

யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார்.

இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-22_10-02-25-