Publicidade

Salmos 56

தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவனே, எனக்கு இரங்கும்; மனிதன் என்னை விழுங்கப்பார்க்கிறான்,

நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான்.

2 என்னுடைய எதிரிகள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்;

உன்னதமானவரே, எனக்கு விரோதமாக அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர்.

3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன்.

4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன்,

நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?

5 எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்;

எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.

6 அவர்கள் ஒன்றாகக் கூடி, மறைந்திருக்கிறார்கள்;

என்னுடைய உயிரை வாங்க விரும்பி, என்னுடைய காலடிகளைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

7 அவர்கள் தங்களுடைய அக்கிரமத்தினால் தப்புவார்களோ?

தேவனே, கோபங்கொண்டு மக்களைக் கீழே தள்ளும்.

8 என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்;

என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்;

அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்;

தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்;

யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.

11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படமாட்டேன்;

மனிதன் எனக்கு என்ன செய்வான்?

12 தேவனே, நான் உமக்குச்செய்த பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது;

உமக்கு நன்றிகளைச் செலுத்துவேன்.

13 நான் தேவனுக்கு முன்பாக உயிருள்ளவர்களுடைய வெளிச்சத்திலே நடக்கும்படி,

நீர் என்னுடைய ஆத்துமாவை மரணத்திற்கும் என்னுடைய கால்களை இடறலுக்கும் தப்புவியாமல் இருப்பீரோ?

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-16_18-40-07-