Publicidade

Salmos 115

தாவீதின் பாடல்.

1 எங்களுக்கு அல்ல, யெகோவாவே, எங்களுக்கு அல்ல,

உமது கிருபையினிமித்தமும் உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய பெயருக்கே மகிமை வரச்செய்யும்.

2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே

என்று தேசங்கள் ஏன் சொல்லவேண்டும்?

3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்;

தமக்குச் சித்தமான அனைத்தையும் செய்கிறார்.

4 அவர்களுடைய சிலைகள் வெள்ளியும் பொன்னும்,

மனிதர்களுடைய கைவேலையுமாக இருக்கிறது.

5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது;

அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.

6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேட்காது;

அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.

7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது;

அவைகளுக்குக் கால்களிருந்தும் நடக்காது;

தங்களுடைய தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.

8 அவைகளைச் செய்கிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் அனைவரும்,

அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.

9 இஸ்ரவேலே, யெகோவாவை நம்பு;

அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

10 ஆரோன் குடும்பத்தாரே, யெகோவாவை நம்புங்கள்;

அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

11 யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களே,

யெகோவாவை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாக இருக்கிறார்.

12 யெகோவா நம்மை நினைத்திருக்கிறார்,

அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்,

அவர் ஆரோன் குடும்பத்தார்களை ஆசீர்வதிப்பார்.

13 யெகோவாவுக்குப் பயப்படுகிற பெரியோர்களையும்,

சிறியோர்களையும் ஆசீர்வதிப்பார்.

14 யெகோவா உங்களையும் உங்களுடைய பிள்ளைகளையும் பெருகச்செய்வார்.

15 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவாவாலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

16 வானங்கள் யெகோவாவுடையவைகள்;

பூமியையோ மனிதர்களுக்குக் கொடுத்தார்.

17 இறந்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும்

யெகோவாவை துதிக்கமாட்டார்கள்.

18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும்

யெகோவாவுக்கு நன்றிசொல்லுவோம்.

அல்லேலூயா.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_10-32-54-