Publicidade

Salmos 137

1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து,

அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.

2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்களுடைய கின்னரங்களைத் தூக்கிவைத்தோம்.

3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும்,

எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி:

சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

4 யெகோவாவின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என்னுடைய வலதுகை தன்னுடைய தொழிலை மறப்பதாக.

6 நான் உன்னை நினைக்காமலும்,

எருசலேமை என்னுடைய முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாகக் கருதாமலும்போனால்,

என்னுடைய நாவு என் மேல் வாயோடு ஒட்டிக்கொள்வதாக.

7 யெகோவாவே, எருசலேமின் நாளில் ஏதோமியர்களை நினையும்;

அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரம்வரை இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.

8 பாபிலோன் மகளே, பாழாகப்போகிறவளே,

நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

9 உன்னுடைய குழந்தைகளைப் பிடித்து,

கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-18_14-04-22-