Publicidade

Salmos 62

எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.

1 தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;

அவரால் என் இரட்சிப்பு வரும்.

2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,

என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.

3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,

நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,

சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.

4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே

அவர்கள் ஆலோசனைசெய்து,

பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,

தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.

(சேலா)

5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;

நான் நம்புகிறது அவராலே வரும்.

6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,

என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;

நான் அசைக்கப்படுவதில்லை.

7 என்னுடைய இரட்சிப்பும்,

என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;

பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;

அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;

தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)

9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;

தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்

மாயையிலும் லேசானவர்கள்.

10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;

செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.

11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;

வல்லமை தேவனுடையது என்பதே.

12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!

தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.

Veja também

Publicidade
Bíblia Online Bíblia Online

Bíblia Online • Versão: 2026-06-15_21-32-39-